தேவனுடைய நேசக்கொடி, உலகத்தின் முன்பாக உங்களைக் கனப்படுத்தும்; உயர்த்தும்; கொண்டாடும். மக்களால் நீங்கள் மறக்கப்பட்டதுபோல் இருந்தாலும், பரலோகம் உங்களை தெரிந்துகொண்டு, உங்கள...
Our Latest Videos


Aaraindhu Arinthavar


Sam's World - Ep 5


The Promise 2026


The Promise 2026 (Tamil)


Karthar Nam Saarbil


Aaraindhu Arinthavar


Sam's World - Ep 5


The Promise 2026


The Promise 2026 (Tamil)


Karthar Nam Saarbil
ஆசீர்வாத திட்டங்கள்
சாட்சியங்கள்

Lucknow
திகைத்து நின்ற ஆராதனாவுக்கு கிடைத்த மலைக்க வைக்கும் ஆசீர்வாதம்
எனக்குத் திருமணமானதும் தேவன் எங்களுக்கு ஒரு மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். விரைவிலேயே என் கணவருக்கு ஆக்ராவுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. ஆகவே, வார இறுதியில் மட்டுமே லக்னோ ஜெப கோபுரத்துக்கு எங்களால் வர இயன்றது. குழந்தையை வைத்துக்கொண்டு ஆய்வு படிப்பையும் (PhD) நான் தொடரவேண்டியதாயிற்று. வாழ்க்கையை மிகவும் கடினமாக உணர்ந்தேன். என் அப்பா சிலவேளைகளில் உதவி செய்தாலும், பல நேரங்களில் பாரமாகவும் தனிமையாகவும் உணர்ந்தேன். அப்படிப்பட்ட வேளையில் என் குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்தேன். அற்புதவிதமாக தேவன் என் குடும்பத்திற்காக ஏறெடுக்கப்பட்ட எல்லா பிரார்த்தனைகளையும் கேட்டு என் கணவருக்கு லக்னோவிலேயே நல்ல வேலை கிடைக்கவும் அவர் வீடு திரும்பவும் கிருபை செய்தார். தேவனுடைய கிருபையால் நான் ஆய்வுப் படிப்பை (PhD) நிறைவு செய்யவும் முதுமுனைவர் படிப்புக்கான (postdoctoral) உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. ஐந்து வருடங்கள் கழித்து நாங்கள் இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள ஏங்கினோம். இரண்டு மாதங்களுக்குள்ளாக கருத்தரிக்காவிட்டால், கரு முட்டையின் எண்ணிக்கை எனக்குக் குறைவாக இருந்ததாலும் செயற்கை கருத்தரித்தல் முறைக்கு (IVF) மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். என் உள்ளம் கவலையில் மூழ்கியது. குடும்ப ஆசீர்வாத கூட்டத்தில் தேவன் அற்புதம் செய்தார். நான் இயல்பாகவே கருத்தரித்தேன். என் மகன், தங்கைக்காக ஜெபித்துக்கொண்டே இருந்தான். ஆண்டவர் அந்த ஜெபத்திற்குப் பதிலளித்து எங்களுக்கு அழகான பெண் குழந்தையைக் கொடுத்தார். இன்றைக்கு நாங்கள் பூரண ஆசீர்வாதம் பெற்ற குடும்பமாக களிகூருகிறோம். எல்லா மகிமையும் தேவனுக்கே செலுத்துகிறோம்.
- ஆராதனா ரோஹித், லக்னோ.

Uttarpradesh
வரவிருக்கும் பிரார்த்தனை கூட்டங்கள்
May ' 26
31
Sunday
Sunday Blessing Meeting
From : 31-05-26 09:00 AM
To : 31-05-26 12:00 PM
Jesus Calls Prayer Tower - Parrys, JC House, 72, Rajaji Salai, Opposite Chennai Beach Railway Station, Chennai - 600001

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now
















































